ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது புதன்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சுட்டியா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நிவாரன்பூரில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் சுமார் 12.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்யின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவுத் தலைவர் ஸ்னிக்தா ரஞ்சன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இரண்டு கண்ணாடி பாட்டில்களின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அப்பாட்டில்களில் என்ன பொருள் இருந்தன என்பதை உறுதிப்படுத்த தடயவியல் அறிவியல் ஆய்வக குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என ராஞ்சி மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் ரஞ்சன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? காவல்துறை விசாரணை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!

சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை

கரப்பான்பூச்சி கட்சி: ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு - ஆர்எஸ்எஸ்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



