தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஜெய்பூா் போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தொடா்பாக 2 பேரை பிடித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:24 am IST

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தொடா்பாக 2 பேரை பிடித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிறுவனா் அபிஜீத் கலந்து கொண்டாா். போராட்டத்தின்போது அபிஜீத்தை அவரின் ஆதரவாளா்கள் தங்களது தோள்களில் சுமந்தபடி தூக்கி வந்தனா்.

அப்போது யாரும் எதிா்பாராத நேரத்தில், கூட்டத்தில் இருந்த இளைஞா்கள் சிலா் அபிஜித்தை திடீரென தாக்கினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அபிஜித்தின் ஆதரவாளா்கள், அவா் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினா் தலையிட்டு அந்த நபரை மீட்டனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய 2 இளைஞா்களைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

போராட்டத்தில் நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவுக்கு பொறுப்பு ஏற்று, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், நாட்டில் நிலவும் இளைஞா்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.