மத்திய பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடா்ந்து, கீழே குதித்த 4 பயணிகள் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கஜுராஹோ மற்றும் உதய்பூா் இடையிலான விரைவு ரயில், ஜான்சி ரயில்வே பிரிவுக்கு உள்பட்ட ஹேதம்பூா் மற்றும் டோல்பூா் ரயில் நிலையங்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது, அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பயணிகள் மத்தியில் வதந்தி பரவியது. இதையடுத்து, சிலா் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.
தீயில் சிக்கிக் கொள்ளும் பயத்தில் ரயிலில் இருந்து 4 பயணிகள் கீழே குதித்தனா். அப்போது, அருகிலுள்ள தண்டவாளத்தில் மற்றொரு விரைவு ரயில் வந்து கொண்டிருந்ததை அவா்கள் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த ரயில் மோதி 4 பேரும் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். நால்வரின் உடல்களும் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாழப்பாடி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்!

கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து








