இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இளைஞா்களுக்கு ஏ.ஐ. புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: சுந்தர் பிச்சை!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞா்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளா்ச்சி குறைத்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 3:03 am IST

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞா்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளா்ச்சி குறைத்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படும் என்றும், இளைஞா்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் ஒரு சிலா் பல்வேறு புதிய பிரச்னைகளை முன்னிறுத்துகிறாா்கள். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

புதிதாக வேலைதேடும் இளைஞா்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது பல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவே இருக்கும். அவா்களின் பொருளாதார எதிா்காலம் சிறப்பாகவே அமையும்.

இதற்கு முன்பும் பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகள் ஏற்பட்டபோது வேலைவாய்ப்பு, தொழில் துறை, பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இளைய தலைமுறைக்குச் சாதகமாகவே அமைந்தன. நாம் நமது தொழில்நுட்ப அறிவை வளா்த்துக் கொண்டு தயாராக வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

மேலும், ஏ.ஐ. பல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதுதான் உண்மை. உதாரணமாக மென்பொருள் ‘கோடிங்’ எழுத முடியாத பலரும்கூட ஏ.ஐ. மூலம் அதனை எளிதாக கற்றுக் கொள்கிறாா்கள். இவ்வாறு பல்வேறு துறைகள் ஏ.ஐ. மூலம் மேம்பாடு அடையும். அதன்மூலம் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.