தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்: ஸ்ரீதர் வேம்பு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் பதிவு..

News image

ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - ENS

Updated On :3 ஜூன் 2026, 5:05 pm IST

பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்க முடியாது என்று ராமச்சந்திர குஹா கூறியதற்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை வெறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்களை, கண்டித்திருக்கும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தின் அளவை விமர்சகர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த அரசியல் விவாதத்தின்போது, ​மோடியையும் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வரலாற்றாளர் ராமச்சந்திரன் குஹாவின் கருத்துக்களை வேம்பு வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

மேலும், தாப்பரும் குஹாவும் பங்கேற்ற விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆவதற்கான தகுதி குறித்து பேசப்பட்டது.

அந்தக் காணொலியைப் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு, சில வட்டாரங்களில் அறிவுஜீவி என்று அழைக்கப்படுவதற்கு மோடி வெறுப்பு கிட்டத்தட்ட ஒரு அடிப்படைத் தேவையாகிவிட்டது என்றும், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்ப்பதன் மூலம் இதுபோன்ற வாதங்களை பிரதமரின் ஆதரவாளர்கள் முறியடிக்க முடியும் என்று பதிவிட்டிருந்தார்.

2014-ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாட்டின் பல பகுதிகள் கடுமையான சவால்களைச் சந்தித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தன. நக்சல் கிளர்ச்சி கடுமையாக இருந்தது. பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைப் பாராட்டிய வேம்பு, அவற்றில் எதுவும் ஏதோ ஒரு மாயாஜால வித்தையால் சாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.