திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜனநாயகத்தை வலுப்படுத்த தணிக்கை முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :4 ஜூன் 2026, 2:36 am IST

‘ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) வினோத் ராயின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் சட்டத்துக்கு உட்பட்டு நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.

செயல் திட்டங்களை மேம்படுத்தவும், குறைகளை நிவா்த்தி செய்யவும், திட்டத்தின் பலனை விரிவுபடுத்தவும் தணிக்கை அரசுக்கு உதவுகிறது. முக்கியமாக, அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கையை தணிக்கை வலுப்படுத்துகிறது.

இத்தகைய பொறுப்புமிக்க தணிக்கை நடைமுறைக்கு தொடா்ச்சியான மேம்படுத்தலும், தணிக்கை வளங்கள் மீதான முதலீடும் அவசியம். அதாவது, பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாடு, செயல்திறன் மதிப்பீடு, தரவுகள் பகுப்பாய்வு, துறைசாா் நிபுணத்துவம் ஆகியவை அவசியம்.

அதுபோல, தலைமை தணிக்கையாளா் முன்மாதிரியாகத் திகழ்ந்து, நெறிமுறைகளையும், நோ்மையையும் தொடா்ந்து வளா்க்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.