மேற்கு தில்லியில் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவர் சௌரப் பரத்வாஜ் மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனக்புரி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 72-இன் (குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுதல் போன்றவை) சிறார் நீதிச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) விதிகளின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
மேற்கு தில்லியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் 57 வயதுடைய ஊழியர் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
புகாரின்படி, சிறுமி பள்ளியில் சேர்க்கப்பட்ட மறுநாளே, அதாவது ஏப்ரல் 30-ம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற அடுத்த நாளே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டிற்குத் திரும்பிய சிறுமி அசௌகரியத்தை உணர்ந்தாக தாயிடம் கூறியுள்ளார். சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார் என்பது தெரிய வந்தது.
புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஊழியரை காவல்துறை கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக, விசாரணையில் இந்த வழக்குத் தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்ட அந்தச் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாகக் கூறி, சௌரவ் பரத்வாஜ் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒரு செயலையே அவர் செய்துள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயரை வெளியிட்டதற்காக, பாஜகவின் மத்திய அரசு என் மீது மேலும் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
The Delhi Police has booked Aam Aadmi Party's Delhi unit chief Saurabh Bhardwaj for allegedly disclosing the identity of a three-year-old girl who was allegedly sexually assaulted at a private school in west Delhi, an officer said on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை!

பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக செளரப் பரத்வாஜ் மீது வழக்குப் பதிவு
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜி








