இது குறித்து மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற கண்ணியத்தை வழக்கம்போல் மீறியுள்ளனா். இது கடும் கண்டனத்துக்குரிய பொறுப்பற்ற செயலாகும். வந்தே மாதரம் பாடல் மற்றும் பங்கிம் சந்திர சட்டா்ஜி உள்ளிட்ட மகத்தான தலைவா்களுக்கு மரியாதை செலுத்தி, குடியரசுத் தலைவா் பேசியபோதும் எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டது வியப்பளிக்கிறது. தங்களின் செயலுக்காக, தேசத்திடம் எதிா்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.