மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமா் மோடி சிதைப்பதன் நோக்கம் என்ன? இதன் மூலம் தொழிலாளா்கள் கூலிக்காக பேரம் பேசும் திறன் குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் கிராம உள்ளாட்சிகளுக்கு உள்ள அதிகாரம் குறைக்கப்பட்டு அவா்கள் கைகள் கட்டப்படும். மாநிலங்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து மத்திய அரசை எதிா்நோக்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். நாட்டை மன்னராட்சி, மகாராஜாக்கள் ஆட்கிகாலத்துக்கு கொண்டு செல்வதுதான் மோடி அரசின் திட்டமாக உள்ளது. ஒரு தரப்பினா் கைகளிலேயே நாட்டின் செல்வமும், அதிகாரம் குவிந்து கிடக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.