அந்த தீர்மானத்தில், "விபி ஜி ராம் ஜி சட்டம் தன்னிச்சையாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், ஊரக மக்களின் வாழ்வாதார உரிமை மற்றும் கூட்டாட்சி அடித்தளத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கர்நாடகத்தில் ஊரக மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்கும் நோக்கில், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான, மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடிய, அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பறிக்கும். எனவே, அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவருமாறு மத்திய அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் கட்டமைப்பில் முழு நம்பிக்கையை இந்த அவை வெளிப்படுத்துகிறது.