/

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி!

இரும்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது தொடர்பாக..

News image
இரு
Updated On :22 ஜனவரி 2026, 8:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீகரின் பலோடாபஜார்- பட்டாபாரா மாவட்டத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பட்டாபாரா பகுதியில் உள்ள பக்குலாஹி கிராமத்தில் அமைந்துள்ள இஸ்பாட் இரும்புத் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் மூத்த நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.

summary

At least six workers were killed and several others injured in a blast at a sponge iron factory in Chhattisgarh's Balodabazar- Bhatapara district on Thursday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.