திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

போபாலில் 26 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடைபெற்று வருவது குறித்து...

News image
மாட்டிறைச்சி விவகாரத்தில் ம.பி. அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் (கோப்புப் படம்)- ANI
Updated On :21 ஜனவரி 2026, 2:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மத்தியப் பிரதேசத்தில், 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், போபால் நகர் மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போபால் நகரத்தில், கடந்த 2025 டிசம்பர் 17 அன்று 26.5 டன் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் கொண்டுவரப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மதுராவில் உள்ள அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது பசுவின் இறைச்சி என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவர்களுக்கு சொந்தமான இடங்களை புல்டோசர் மூலம் இடித்து தகர்க்குமாறும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சியின் பாதுகாப்பின் கீழ் இறைச்சிக் கூடத்தில் பசுக்கள் கொல்லப்படுவதாகக் குற்றம்சாட்டிய பஜ்ரங் தள் அமைப்பினர் போபால் மேயர் மால்தி ராயின் வீட்டை இன்று (ஜன. 21) முற்றுகையிட்டனர்.

போபாலைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான மேயர் மால்தி ராயின் புகைப்படத்தில் கருப்பு சாயம் பூசியும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த விவகாரம் அங்கு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

ollowing the seizure of 27 tons of beef, members of the Bajrang Dal staged a protest to the Bhopal mayor's house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.