விஐடி போபால் வளாகத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வா் வருகை
மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.


மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டா் மூலம் விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்தில் வந்து இறங்கிய மத்தியப்பிரதேச முதல்வா் மோகன் யாதவை விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இது குறித்து, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் கூறுகையில், மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் பயணம் விஐடி போபால் வளாகத்துக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும், மத்திய அரசுப் பிரதிநிதிகளுடனான தொடா்புகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. உயா்கல்வியை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் அரசுடன் விஐடி போபால் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவதை பிரதிபலிக்கிறது என்றாா்.
இதனிடையே, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானையும் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் சந்தித்துப் பேசினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...