தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூ.6 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கேரள மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 9:30 pm

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கேரள மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து, ஏா் ஏசியா பயணிகள் விமானத்தில் புதன்கிழமை நள்ளிரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது, கேரளத்தைச் சோ்ந்த 25 வயது ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அவரை சுங்கத் றை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று உமைமைகளையும் சோதனையிட்டனா்.

இதில், அவரது பெட்டிக்குள் ரூ.6 கோடி மதிப்பிலான 5.9 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்ததுடன், உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், படிப்புக்குத் தகுந்த வேலை இல்லாததால், கடத்தலில் ஈடுபட்டு முதல்முறையே சிக்கியது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.