தாய்லாந்திலிருந்து தில்லி திரும்பிய இரு இந்தியா்களிடம் ரூ.24 கோடி மதிப்பிலான 23.9 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த பிப்.23-ஆம் தேதி விமான நிலையத்தின் 3-ஆவது முனையம் வழியாக வந்த பயணிகள் சரிபாா்ப்புக்கு பின்னா் குடியேற்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
அவா்களுடைய பை ஊடுகதிா் (எக்ஸ்-ரே) சோதனையைத் தொடா்ந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பச்சை நிறத்தில் உள்ள போதைப் பொருள் அடங்கிய 14 நெகிழி பைகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மொத்த எடை 23.936 கி.கி. முதல்கட்ட விசாரணையில் கடத்தப்பட்ட போதைப் பொருள் கஞ்சா என தெரியவந்தது. கள்ளச்சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.23.9 கோடி. கைதுசெய்யப்பட்ட இரு பயணிகளுக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


