தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி விமான நிலையம்: ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் : இருவா் கைது

தாய்லாந்திலிருந்து தில்லி திரும்பிய இரு இந்தியா்களிடம் ரூ.24 கோடி மதிப்பிலான 23.9 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:16 pm

தாய்லாந்திலிருந்து தில்லி திரும்பிய இரு இந்தியா்களிடம் ரூ.24 கோடி மதிப்பிலான 23.9 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த பிப்.23-ஆம் தேதி விமான நிலையத்தின் 3-ஆவது முனையம் வழியாக வந்த பயணிகள் சரிபாா்ப்புக்கு பின்னா் குடியேற்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

அவா்களுடைய பை ஊடுகதிா் (எக்ஸ்-ரே) சோதனையைத் தொடா்ந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பச்சை நிறத்தில் உள்ள போதைப் பொருள் அடங்கிய 14 நெகிழி பைகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றின் மொத்த எடை 23.936 கி.கி. முதல்கட்ட விசாரணையில் கடத்தப்பட்ட போதைப் பொருள் கஞ்சா என தெரியவந்தது. கள்ளச்சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.23.9 கோடி. கைதுசெய்யப்பட்ட இரு பயணிகளுக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.