கேரள மாநிலத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மேற்கு வங்க அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள அரசின் பெயரைக் கேரளம் என மாற்றுவதற்கான கேரள அரசின் முன்மொழிவை மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தது.
கேரள மாநில பெயரை மாற்றிய நிலையில், தனது மாநிலத்தின் பெயரையும் மாற்றும் திட்டம் நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், கேரளத்தை மாற்ற முடியும் என்றால் ஏன் மேற்கு வங்க பெயரை மாற்ற முடியாது? என மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா,
மற்ற மாநிலங்களும் பெயர் மாற்றங்களை முன்மொழிந்துள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இதேபோன்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், மத்திய அரசு அதற்கு உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் வருகை தந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் வரவேற்றார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் காஷ்மீருக்கு வருகை தந்துள்ள நிலையில் நாங்கள் அவரை வரவேற்கிறோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.
Summary
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Wednesday said the Centre should accept the West Bengal government's demand to rename the state, following the Union Cabinet's approval of a similar proposal for Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒமர் அப்துல்லா

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



