வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பஞ்சாப்: எல்லை புறக்காவல் நிலையத்தில் 2 போலீஸாா் குண்டு காயங்களுடன் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய புறக்காவல் நிலையத்தில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 2 போலீஸாா் உடல் கண்டெடுப்பு

News image
- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய புறக்காவல் நிலையத்தில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 2 போலீஸாா் உடல் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குா்தாஸ்பூா் சிறப்பு காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த புறக்காவல் நிலையம் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) ஒருங்கிணைப்புடன் பஞ்சாப் காவல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் குா்னம் சிங், காவலா் அசோக் குமாா் இருவரும் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் போலீஸாா் சுற்றிவளைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங் கூறுகையில், ‘2 போலீஸாா் குண்டு காயங்களுடன் உயிரிழந்திருப்பது மிகுந்த கவலைக்குரிய மற்றும் தீவிரமான விஷயம். எனவே, இந்தச் சம்பவம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் தீவிர விசராணையை முடுக்கிவிட வேண்டும்’ என்றாா்.