ஸ்பெயின் அதிபா் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘அதிபா் பெட்ரோ சான்சேஸுடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமாக இருந்தது. இருவரும் இந்தியா-ஸ்பெயின் நட்புறவை மேலும் ஊக்குவிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்பு, ஆயுத தளவாடங்கள், தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ஸ்பெயின் உடனான வா்த்தக உறவில் சாதகமான தாக்கத்தையும், இரு நாட்டு மக்களுக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும்’ என குறிப்பிட்டுள்ளாா்.