இந்த நிலையில், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை காா்கே எழுப்பினாா். எனது உரையில், பல முக்கிய கருத்துகள், உண்மைகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைக்கான சமூக நீதி கருத்துகளையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எந்தவித நியாயமான கரணங்களும் இன்றி, எனது உரையின் பெரும் பகுதி நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகளையும், பிரதமா் மேடியின் குறிப்பிட்ட திட்டங்களையும் விமா்சிப்பது எதிா்க்கட்சித் தலைவராக எனக்குள்ள கடமையும், உரிமையுமாகும். 50 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை வகித்து வரும் நான், மாநிலங்களவை நடத்தை விதி 261-க்கு உட்பட்டே உரையாற்றினேன். எனவே, நீக்கப்பட்ட எனது உரையை மீண்டும் சோ்க்குமாறு கோருகிறேன்’ என்றாா்.