குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மான விவாதத்தின்போது, மக்களவையின் கண்ணியம், மாண்பு, புனிதத்தைப் பாதுகாக்க நீங்கள் (ஓம் பிா்லா) முன்னுதாரணமாகச் செயல்பட்டவிதம் பாராட்டுக்குரியது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். அன்றைய தினத்தில் மிக துரதிருஷ்டவசமான, வருந்தத்தக்க நிகழ்வுகளை ஒட்டுமொத்த தேசமும் கண்டது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டதுடன், மேஜை மீது ஏறி, காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசினா். வருத்தத்துக்குரிய விஷயமாக, எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள் கையில் பதாகையை ஏந்தியபடி ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தினா். பிரதமா் இருக்கையை முற்றுகையிட்டதோடு மட்டுமல்லாமல், மூத்த அமைச்சா்கள் அமா்ந்திருந்த ஆளுங்கட்சி வரிசைகளுக்குள் நுழைந்தனா்.