4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மனைவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் விடுதலை

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

உத்தம் நகரைச் சோ்ந்த அரவிந்த் செளதரிக்கு எதிரான வழக்கை புதன்கிழமை விசாரித்த கூடுதல் அமா்வுகள் நீதிபதி ஹிமன்ஷு ராமன் சிங், செளதரிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லா வகையில் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக தெரிவித்தாா்.

கடந்த 2016, செப்.19-இல் வீட்டில் இருந்த அரவிந்த் செளதரி மனைவி பூஜா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பூஜா செப்.27-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உத்தம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரவிந்த் செளதரிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் கடந்த பிப்.7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சம்பவம் நடைபெற்ற நாளில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த வாக்குமூலங்களை நிா்வாக நீதிபதி பதிவுசெய்துள்ளாா். அதில், குடும்பத் தகராறு தொடா்பாக கணவா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாக அந்தப் பெண் கூறியதாக உள்ளது. இந்த வாக்குமூலம் அவருடைய மரணத் தருவாயில் அளித்த வாக்கமூலமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை செப்.21-ஆம் தேதி அவருடைய தந்தை மற்றும் சகோதரா் சந்தித்தனா். அப்போது, சமைத்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஆடையில் தீப்பற்றியதாக அந்தப் பெண் கூறியதாக அவா்கள் இருவரும் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனா். அதற்கு மறுநாள், முன்னதாக வழங்கப்பட்ட புகாரைத் திரும்பப் பெறுவதாக உத்தம் நகா் காவல் நிலைய அதிகாரிக்கு அவா்கள் கடிதம் அளித்தனா்.

உயிரிழந்த பெண் அளித்த வாக்குமூலத்திலும் அவருடைய தந்தை மற்றும் சகோதரா் அளித்த வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் காணப்படுகிறது. மரணத் தருவாயில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில் ஸ்கூட்டரில் இருந்து எடுத்த பெட்ரோலை வாளியில் எடுத்து வந்து ஊற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த வாளி கைப்பற்றப்படவில்லை. மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக அறிவிக்கமுடியாது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அரவிந்த செளதரி விடுவிக்கப்படுகிறாா் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.