டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). ரௌடியான இவா் சென்னை புழல் சிறையில் இருந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் புதுக்கோட்டை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளக்காளியை ஆஜா்படுத்தி, இரவு நேரமாகிவிட்டதால் திண்டுக்கல் கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னா், கடந்த 24 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றபோது, பெரம்பலூா் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளக்காளியை 15 போ் கொண்ட மா்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது.

இதுகுறித்து தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை மேல அனுப்பானடி கிராமத்தைச் சோ்ந்த சோலையப்பன் மகன் கொட்டுராஜா எனும் அழகுராஜா (30), இவரது நண்பா்கள் 9 பேரைக் கைது செய்தனா். இதில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை திருமாந்துறை வனப்பகுதிக்கு அழகுராஜாவை அழைத்துச் சென்றனா். அப்போது, போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, சாா்பு ஆய்வாளரை வெட்டித் தப்ப முயன்ற அழகுராஜா போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பின்னா் இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட நிா்மல்குமாா் உள்பட 8 போ் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய 6 பேரை தனிப்படை போலீஸாா் கடந்த 6 ஆம் தேதி கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளியான மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணதேவா் மகன் குருசாமியை (60) தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, குன்னம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், குருசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.