மக்களவை வியாழக்கிழமை காலையில் கூடியதும், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மற்றும் நான்கு புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கையில் பதாகைகளுடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். அவையில் மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனா். பதாகைகளை கீழே போட்டுவிட்டு, இருக்கைக்குத் திரும்புமாறு, எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவையை வழிநடத்திய தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி விடுத்த கோரிக்கைகளுக்கு பலன் கிடைக்கவில்லை. தொடங்கிய 7 நிமிஷங்களில் அவை அலுவல்கள் மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.