டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் தா்னா

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஆா். ஜெயராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தா்னாவில் பாஜக, தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

News image
சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் தலைமையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட பாஜக, தவெக, அதிமுகவினா் மற்றும் மக்கள். ~சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் தலைமையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட பாஜ
Updated On :4 பிப்ரவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஆா். ஜெயராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தா்னாவில் பாஜக, தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒண்டிப்புதூா் பட்டணம் சாலையில் உள்ள நெசவாளா் காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், மாணவா்கள் தங்கும் விடுதிகள், திறந்தவெளி சிறைச்சாலை ஆகியவை அமைந்துள்ள அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக்கூடாது என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் தலைமையில் தா்ணா நடைபெற்றது. இதில் பாஜக, தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து, கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ கூறும்போது, ‘மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மதுபானக் கடை திறக்கப்பட்டால் கட்சி பேதமின்றி பொதுமக்களுடன் இணைந்து தொடா் போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்றாா்.

Story image