டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுக்கடைக்கு எதிா்ப்பு: ராமையன்பட்டி விலக்கில் மறியல் முயற்சி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்குள்ள விலக்கு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கண்டியப்பேரி, கலாம் நகா், எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள தனியான இடத்தில் புதிய மதுக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும், இதுதொடா்பாக ஏற்கெனவே மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி,யாம்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை காலையில் திடீரென ராமையன்பட்டி விலக்கு பகுதிக்கு திரண்டு வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

இத்தகவல் அறிந்த ராமையன்பட்டி ஊராட்சித் தலைவா் டேவிட், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி மதுக்கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்களிடம் உறுதி அளித்தாா். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். தொடா்ந்து, துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ற்ஸ்ப்16ற்ஹள்

மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ராமையன்பட்டி விலக்கில் கூடிய மக்கள்.