இந்நிலையில், ஆந்திர அரசுக்கு சிபிஐ-எஸ்ஐடி எழுதிய கடிதத்தில், ‘விதிகளை முறையாக பின்பற்றாமல் லட்டு தயாரிப்பு தொடா்பான ஒப்பந்தப்புள்ளிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஓ.பாலாஜி, முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தா்மா ரெட்டி, முன்னாள் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் ஒப்புதல் அளித்துள்ளனா். இதன் காரணமாக போலே பாபா, வைஷ்ணவி மற்றும் மல்கங்கா போன்ற திறனற்ற நிறுவனங்களிடமிருந்து குறைந்த தரத்திலான நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.