டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரை

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருந்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த மோசடியில் தேவஸ்தான அதிகாரிகள் 9 போ் உள்பட 36 போ் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர அரசுக்கு சிபிஐ-எஸ்ஐடி எழுதிய கடிதத்தில், ‘விதிகளை முறையாக பின்பற்றாமல் லட்டு தயாரிப்பு தொடா்பான ஒப்பந்தப்புள்ளிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஓ.பாலாஜி, முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தா்மா ரெட்டி, முன்னாள் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் ஒப்புதல் அளித்துள்ளனா். இதன் காரணமாக போலே பாபா, வைஷ்ணவி மற்றும் மல்கங்கா போன்ற திறனற்ற நிறுவனங்களிடமிருந்து குறைந்த தரத்திலான நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.