/

டிசம்பரில் விமான சேவை கடும் பாதிப்பு: பயணிகளுக்கு ரூ. 22 கோடிக்கும் மேல் இழப்பீடு வழங்கிய இண்டிகோ!

சேவைகள் முடக்கத்துக்கு இழப்பீடாக பயணிகளுக்கு ரூ. 22 கோடி வழங்கிய இண்டிகோ!

News image
- Center-Center-Chennai
Updated On :2 பிப்ரவரி 2026, 4:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

2025 டிசம்பரில் இண்டிகோ நிறுவன விமான சேவைகள் முடக்கத்துக்கு இழப்பீடாக பயணிகளுக்கு அந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நிறுவனம் ரூ. 22 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.

விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) கடந்த ஆண்டு நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் முன்கூட்டியே திட்டமிடாததால், விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன்விளைவாக, டிசம்பர் தொடக்கத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், விமானம் ரத்து, தாமதமாகுதல் அல்லது பிற காரணங்களுக்காக பயணிகளுக்கு சேவைக் குறைபாடு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டின் டிசம்பரில், விமான நிறுவனங்கள் பயனிகளுக்கான இழப்பீடாக செலவழித்த தொகை மொத்தம் ரூ. 24 கோடிக்கும் மேல் என்ற தகவலை மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இண்டிகோ நிறுவனம் ரூ. 22.68 கோடியும், ஏர் இந்தியா குழுமம் ரூ. 74.61 லட்சமும், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஆகாஷா தலா ரூ. 40 பயணிகளுக்காக வழங்கியுள்ளன.

summary

IndiGo has shelled out Rs 22.68 crore towards compensation and facilitation of passengers following massive flight disruptions in December last year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.