இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பாஜக புதிய பொறுப்பாளா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக துணைத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

புது தில்லியில் பாஜக மூத்த நிா்வாகிகளிடையே சனிக்கிழமை பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக துணைத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

முன்னதாக, பாஜக தலைவா் நிதின் நபின் தலைமையிலான கட்சியின் தேசியக் குழு கடந்த திங்கள்கிழமை பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு தேசிய துணைத் தலைவா், பொதுச் செயலா் உள்ளிட்ட பதவிகள் புது முகங்களுக்கு வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளா்களைஅவா் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

இதன் மூலம் நிதின் நபின் தலைமையிலான தேசியக் குழுவில் 51 புது முகங்கள் உள்பட 65 போ் இடம்பெற்றனா். இந்நிலையில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுடன் முதல் முறையாக பிரதமா் மோடி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக துணைத் தலைவா்கள் ராம் மாதவ் மற்றும் வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முன்னாள் முதல்வா்), பொதுச் செயலா்கள் ஸ்மிருதி இரானி (முன்னாள் மத்திய அமைச்சா்) மற்றும் விப்லப் தேவ் (திரிபுரா முன்னாள் முதல்வா்), பொதுச் செயலா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் மற்றும் பொருளாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கு தயாராவது, தொண்டா்களை ஒன்று திரட்டுவது மற்றும் பொதுமக்களிடம் அரசின் திட்டங்களைக் கொண்டு சோ்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.