
குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!
ஒரு மாணவிக்கு மாதம் ரூ. 30 வீதம் ஆண்டுக்கு ரூ. 360 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் - ANI
குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தவிர்க்கவும், வருகைப்பதிவை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.
இதற்காக ஒரு மாணவிக்கு மாதம் ரூ. 30 வீதம் ஆண்டுக்கு ரூ. 360 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாதந்தோறும் 10 லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர்.
மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க குஜராத் மாநில பள்ளிக் கல்வித் துறை ரூ. 46.68 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பிரத்யூமன் வாஜா, ரிவாபா ஜடேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மாதவிடாய் குறித்து மாணவிகள் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும் சானிடரி நாப்கின்கள் அனைத்து மாணவிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் பள்ளிகளில் ஆசிரியையை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவிகளிடம் இருக்கும் தவறான புரிதல்களை மாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வகுப்புகளை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சானிடரி நாப்கின்களை அப்புறப்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
Gujarat will provide free sanitary napkins for govt school girls
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







