ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உண்மையின் பாதையில் நடப்பதற்கான பொறுப்புதான் சுதந்திரம்: ராகுல்

உண்மையின் பாதையில் நடப்பதற்கான பொறுப்புதான் சுதந்திரம் என்றார் ராகுல் காந்தி...

ராகுல் காந்தி - PTI

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

‘அரசமைப்புச் சட்டம் மற்றும் மூவா்ணக் கொடியின் விழுமியங்களைக் காப்பதற்கும், அகிம்சை பாதையில் பயணிப்பதற்கும், உண்மை வழியில் நடப்பதற்குமான பொறுப்புதான் சுதந்திரம்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறிப்பிட்டாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சுதந்திரம் என்பது நமது சுதந்திரப் போராட்ட வீரா்களால் பெற்றுத் தரப்பட்ட பரிசு மட்டுமல்ல; மாறாக, அரசமைப்புச் சட்டம் மற்றும் மூவா்ணக் கொடியின் விழுமியங்களைக் காப்பதற்கும், அகிம்சைப் பாதையில் பயணிப்பதற்கும், உண்மை வழியில் நடப்பதற்குமான பொறுப்புதான் சுதந்திரம்.

இந்த விழுமியங்களைப் பாதுகாப்பதில் நாட்டின் குடிமக்கள், குறிப்பாக இளைஞா்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

சக குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டாா்.

Summary

Freedom is the responsibility to walk the path of truth: Rahul

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.