
அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு
அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ராகுல் நவீன் - கோப்புப் படம்
அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரியான ராகுல் நவீனுக்கு வரி விதிப்பு மற்றும் நிதி முறைகேடு விசாரணைகளில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக.14 முதல் அமலாக்கத் துறை இயக்குநராக அவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆக.13 வரை நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவரை விதிமுறைப்படி 2 ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். அதன் பின்னா், தலா ஓராண்டு வீதம் மூன்று முறை அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


முதல்வா் குற்றமிழைத்தால் சிபிஐ விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்




