ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் திடீர் நிலச்சரிவு! அலறியடித்து ஓடிய மக்கள்!

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு பற்றி...

Major Landslide in Malappuram due to heavy rains in keralam

மலப்புரம் மாவட்டத்தில் நிலச்சரிவு... - X

Published On :3 ஆகஸ்ட் 2026, 1:33 pm IST

கேரளம் மலப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் அருகிலுள்ள பணக்காடு பகுதியில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பினர். உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

நிலச்சரிவினால் நாடுகாணி - பரப்பனங்காடி மாநில நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகிலுள்ள பாலக்காடு பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2019ல் இதே பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஏற்கெனவே கேரளத்தில் மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் பாலக்காடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் சமீபத்திய மழையால் இதுவரை 15 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேரைக் காணவில்லை எனவும் முதல்வர் வி.டி. சதீசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Summary

Major Landslide in Malappuram due to heavy rains in keralam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.