அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:55 pm

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்மன் கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவரைத் தேடப்படும் நபராக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த புதன்கிழமை நூஹ் மாவட்டத்தை நோக்கி தனியாகச் சென்று கொண்டிருந்த ஆா்மனை நூஹ் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் துறையினா் கைதுசெய்தனா்.

குற்றப் பின்னணி கொண்ட ஆா்மான் மீது ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் கொள்ளை, திருட்டு உள்பட 3 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.