ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழவிட்டதாக பாஜகவின் பர்வேஷ் வர்மா குற்றம் சாட்டினார்.
அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதிவிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு லோதி எஸ்டேடில் புதிதாகப் பங்களா ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பர்வேஷ் வர்மா கூறியதாவது,
கேஜரிவால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பழகிவிட்டார். ஷீஷ் மஹாலில் இருந்து வெளியேறிய அவர் பஞ்சாபிற்குச் சென்றார். லோதி எஸ்டேட்டில் வகை VII பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பங்களாவின் படங்களைக் காண்பித்த அமைச்சர், மத்திய பொதுப்பணித்துறை பொதுவாகப் பங்களாக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதில்லை. அந்தப் பங்களாவில் உயர்தர வசதிகளை உருவாக்குவதற்கு கேஜரிவால் தனது சொந்தப் பணத்தைச் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஷீஷ் மஹால் 2ஐ அவர் உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அந்தப் பங்களாவிற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதையும், அந்தப் பணத்திற்கான ஆதாரம் என்ன என்பதையும் ஆம் ஆத்மி கட்சியும் கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது கேஜரிவால் குடியேறியுள்ள, லோதி எஸ்டேட் எண் 95-இல் அமைந்துள்ள அவரது புதிய இல்லத்தில் ஐந்து படுக்கையறைகளும், நான்கு வரவேற்பறைகளும் இருப்பதாக வர்மா தெரிவித்தார்.
பர்வேஷ் வர்மாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் கேஜரிவாலைத் தோற்கடித்த வர்மா, ஆம் ஆத்மி கட்சியின் ஊழலே, அக்கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
Summary
The Bharatiya Janata Party on Saturday cornered Aam Aadmi Party national convener Arvind Kejriwal over the new bungalow allotted to him at Lodhi Estate here, dubbing it as "Sheesh Mahal 2" and alleging expenditure of private money to build amenities in it.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


