தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கவில்லை என்று தகவல்.

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:59 am

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நேற்று சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டிக்கு வந்து தனது பெயர் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிப்பார் என்று அவரது தொண்டர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள்.

கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, என்ன காரணத்தினாலோ இந்த முறை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வப்போது கோவை சென்று பிரசாரம் செய்து வந்தார்.

தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்ற நிலையிலும், அவர் கரூர் திரும்பவில்லை. கோவையிலேயே நேற்று முழுக்க அவர் இருந்துள்ளார். கரூர் வந்து வாக்களிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்த நிலையில், அவர் கோவையிலேயே இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருக்கலாமா என்று இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கரூரில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதால்தான் செந்தில் பாலாஜி, வாக்குப்பதிவு முழுக்க வாக்குச்சாவடிக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு வந்தார். அதனால்தான் அவர் கரூர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

Summary

It is reported that Karur MLA Senthil Balaji did not go to his hometown and vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.