தென்கிழக்கு தில்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில், இந்திய வருவாய்த்துறை அதிகாரியின் 22 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவத்தில் கைதான குற்றவாளி ராகுல் மீனா பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளி ராகுல் மீனா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தன்னுடைய குற்றங்களுக்காக வருந்தவில்லை என்றும், விசாரணையின்போது வாக்குமூலத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தன்னுடைய பேசும்பாணியை அவ்வப்போது மாற்றிக் கொண்டு நீதிபதி முன் பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
நான் குற்றம் செய்துவிட்டேன், தவறுதான் என்று நீதிபதியிடம் குற்றவாளி ராகுல் கூறியதைத் தொடர்ந்து, அவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி, குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேட்டதற்கு, இது என்னுடைய வாக்குமூலமாக நான் கருதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
குற்றம் நடந்த வீட்டில், ராகுல் எட்டு மாதங்கள் வேலை செய்திருக்கிறார், நிதித் தொடர்பாக ஏதோ முறைகேடு செய்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள். இதனால், அந்த வீட்டின் அனைத்து விஷயங்களும் குற்றவாளிக்கு தெரிந்திருக்கிறது, பெற்றோர் வழக்கமாக காலையில் வெளியில் செல்வதும் தெரிந்திருக்கிறது. இதுவே குற்றத்துக்கு அடிப்படையாக மாறிவிட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, ராகுல், ராஜஸ்தானில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ராகுல் கொள்ளையடித்த பொருள்களும் அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Summary
Shocking information has been released about the culprit in the murder case of an IRS officer's daughter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




