தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது குறித்து அமித் ஷா கருத்து...

News image

மேற்கு வங்கத்தில் சாலைவலம் மேற்கொண்ட அமித் ஷா - பிடிஐ

Updated On :22 ஏப்ரல் 2026, 3:19 pm

ராகுல் காந்தியுடன் சேர்ந்திருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும் கெடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என மல்லிகார்ஜுன கார்கே பேசியதை சுட்டிக்காட்டி அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது, கார்கேவையும் ராகுல் காந்தியையும் விமர்சித்து அமித் ஷா பேசியதாவது:

''நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிடுகிறார். ராகுல் காந்தியுடனான சேர்க்கையால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும், பேச்சும் தரமிழந்துள்ளது.

நீங்கள் எவ்வளவு அவதூறு பேசுகிறீர்களோ, எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அதையெல்லாம் விட பெரியதாக தாமரை மலர்ந்தே தீரும். நாங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இது முத்தலாக் முறையையும், நான்கு திருமணங்கள் செய்துகொள்வதையும் முடிவுக்கு கொண்டுவரும்'' என அமித் ஷா பேசினார்.

Summary

Rahul Baba s influence has corrupted Kharge ji's language too Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.