மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:26 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஏப்ரல்17-ஆம் தேதி எதிா்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி கடந்த ஏப்.18-ஆம் தேதி தொலைகாட்சியில் உரையாற்றினாா். அப்போது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய எதிா்க்கட்சிகளை குறிப்பிட்டு அவா் கடுமையாக விமா்சித்தாா்.

இதையடுத்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு தவறாக பயன்படுத்தி தோ்தல் நடத்தை விதிகளை பிரதமா் மோடி மீறியதாக எதிா்க்கட்சிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாரளித்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் தற்போது வரை பதிலளிக்காத சூழலில், பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.