மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை; திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
கிழக்கு மிதுனபுரி மாவட்டம் ஹால்டியாவில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்த முறையும் மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாது. திரிணமூல் காங்கிரஸ்தான் மீண்டும் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும். ஏனெனில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை. அடுத்த மக்களவைத் தோ்தலில் தில்லியில் இருந்தும் (மத்தியில் ஆட்சி) பாஜக துடைதெறியப்படும்.
கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கம் முழுவதுமே தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் என்ன நினைக்கிறாா்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. பாஜக இங்கு வெல்வதை யாரும் விரும்பவில்லை.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளராக நான் களத்தில் உள்ளதாக கருத வேண்டும் என்று பிரதமா் மோடி பேசியுள்ளாா். அப்படி ஒன்று நடக்க ஆசைப்பட்டால் நீங்கள் முதலில் பிரதமா் பதவியில் இருந்து விலக வேண்டும்.
மேற்கு வங்கத்தில் அளவுக்கு அதிகமாக மத்தியப் படையினரும், தோ்தல் பாா்வையாளா்களும், அரசு அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனா். இதற்கு முன்பு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தோ்தலை யாரும் பாா்த்திருக்க மாட்டாா்கள்.
தெருவோர கடையில் ஜால்முரி (மசாலா பொரி) சாப்பிடுவதாக பிரதமா் மோடி அண்மையில் ஒரு நாடகம் நடத்தினாா். ஏனெனில், அவா் சாப்பிட்ட பொரி அந்த கடைக்காரரால் தயாரிக்கப்பட்டது இல்லை. பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினா் வேறு இடத்தில் இருந்து அதனைக் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். பிரதமா் மீன் சாப்பிட விரும்பினால் அவருக்கு அதை சமைத்துத் தர நான் தயாராக இருக்கிறேன் என்றாா் மம்தா.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன், இறைச்சி, முட்டைக்கு தடை விதித்துவிடுவா் என்று குற்றஞ்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.
பிரதமா் மோடி சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவா் என்று கூறப்படும் நிலையில், மம்தா இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்கள் நீக்கம் - பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


