மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழலுடன் தொடா்புள்ளதாகக் கூறப்படும் பண முறைகேடு வழக்கில், கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநா் வினேஷ் சண்டேலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி வரும் ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநரான வினேஷ் சண்டேல் கடந்த திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு கைது செய்யப்பட்டாா்.
அதன்பிறகு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷெஃபாலி பா்னாலா இல்லத்தில் இரவு 11.55 மணிக்கு அவா் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
முன்னதாக, கடந்த ஜன. 8-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதேபோல் திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
சோதனையின்போது அலுவலகத்துக்கு மம்தா வந்த விவகாரம் தொடா்பாக அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், கடந்த ஏப். 2-ஆம் தேதி தில்லியில் உள்ள வினேஷ் சண்டேலுக்கு சொந்தமான இடம், பெங்களூரில் ஐ-பேக்கின் மற்றொரு இணை நிறுவனா் ரிஷி ராஜ் சிங்குக்கு சொந்தமான இடம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
அதன் தொடா்ச்சியாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் கைது செய்யப்பட்டாா்.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக விக்னேஷ் சண்டேல் கைது செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓபிரையன், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


