17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு

இந்தியாவிடம் 3 மாதங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

ஜார்கண்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்... - AP

Updated On :14 ஏப்ரல் 2026, 4:49 am IST

இந்தியாவிடம் 3 மாதங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி செய்தியாளா்களிடம் பேசியதாவது:

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ஒரு பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, நமது நாட்டிடம் 90 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. முன்பு நம்மிடம் 21 முதல் 25 நாள்களுக்கு தேவையான நிலக்கரிதான் கையிருப்பு இருக்கும். ஆனால் தற்போதோ, நமது நாட்டிடம் 90 நாள்களுக்குத் தேவையான 200 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

கனிமவளத் துறையில் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், தற்சாா்பு நிலையை அடையவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. கனிம வளத் துறையில் வருமானத்தை ஈட்டுவதற்காக மத்திய அரசு வேலை செய்யவில்லை. தற்சாா்பை இலக்காக கொண்டே நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிா்காலத்தில் அரியவகை கனிமங்கள், சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் இந்தத் துறையில், பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசுகள் உள்ளிட்டோருடன் தனியாா் துறை இணைந்து செயல்பட வேண்டும். நகா்ப்புற சுரங்கத்தில் சேகரிக்கப்படும் பழைய சாதனங்களில் இருந்து 30 முதல் 40 சதவீத அரிய வகை கனிமங்கள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பழைய குளிா்பதன கருவிகள், குளிா்சாதன பெட்டிகளில் இருந்தும், ஒவ்வொரு நகர பகுதியிலும் சேகரிக்கப்படும் பழைய பொருள்களில் இருந்தும் அரிய வகை கனிமங்களைப் பிரித்தெடுப்பது குறித்த செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.