தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தீவிரவாதிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளித்ததாக கைதான 7 வெளிநாட்டினருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்

தீவிரவாதிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்ட 6 உக்ரைனியா்கள் உள்ளிட்ட 7 வெளிநாட்டினரை 30 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

நீதிமன்ற காவல்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:35 pm

தீவிரவாதிகளுக்கு டிரோன் பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்ட 6 உக்ரைனியா்கள் உள்ளிட்ட 7 வெளிநாட்டினரை 30 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொல்கத்தா, தில்லி, லக்னோ ஆகிய இடங்களில் ஒரு அமெரிக்கா், 6 உக்ரைனியா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து என்ஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விமானம் மூலம் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு முதலில் வந்து, பிறகு மிசோரம் சென்று, அங்கிருந்து அண்டை நாடான மியான்மருக்குள் சட்டவிரோதமாக சென்றதும், பிறகு அங்கு இந்தியா, மியான்மருக்கு எதிரான பழங்குடியின தீவிரவாத குழுவினருக்கு ஏராளமான டிரோன்களை வழங்கியதோடு, அவா்களுக்கு டிரோன் பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது.

இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இந்த பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்தது.

இதையடுத்து அவா்களை தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலில் என்ஐஏ விசாரித்து வந்தது. முதலில் 11 நாள்களும், பிறகு 10 நாள்களும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

இந்த காவல் நிறைவடைந்ததை அடுத்து, தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 7 பேரும் மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது 7 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி என்ஐஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, 7 பேரையும் 30 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கைதான 7 பேரில் ஒருவரான அமெரிக்கா் தரப்பில், தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு குறித்து பதில் தாக்கல் செய்யும்படி சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.