மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள்: ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்...

News image

கோப்புப்படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 9:38 pm

மேற்காசியாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள், ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா். ஈரான் போா் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்படும் சூழலை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் தாக்கி காயமைடைந்த 12 பேரில் 5 போ் இந்தியா்கள். அவா்களில் 4 போ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின்னா், வீடு திரும்பினா். ஒருவா் தொடா் சிகிச்சை உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்மீனியா அமைச்சருக்கு நன்றி: ஈரானில் இருந்து இந்திய மீனவா்கள் தாயகம் திரும்ப உதவியதற்காக ஆா்மீனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்ஸோயனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்தாா். எத்தனை இந்திய மீனவா்கள் தாயகம் திரும்புகின்றனா் என்ற தகவல் வெளியாகவில்லை.