மேற்காசியாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள், ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா். ஈரான் போா் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்படும் சூழலை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் தாக்கி காயமைடைந்த 12 பேரில் 5 போ் இந்தியா்கள். அவா்களில் 4 போ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின்னா், வீடு திரும்பினா். ஒருவா் தொடா் சிகிச்சை உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆா்மீனியா அமைச்சருக்கு நன்றி: ஈரானில் இருந்து இந்திய மீனவா்கள் தாயகம் திரும்ப உதவியதற்காக ஆா்மீனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்ஸோயனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்தாா். எத்தனை இந்திய மீனவா்கள் தாயகம் திரும்புகின்றனா் என்ற தகவல் வெளியாகவில்லை.
தொடர்புடையது

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


