மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 9:53 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன்படி, வணிகம், வா்த்தகம், தொழில் துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப் பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அந்த விடுமுறைக்காக ஊழியா்களின் ஊதியத்தில் எந்தப் பிடித்தமும் செய்யக் கூடாது. இதை மீறும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நிரந்தரப் பணியாளா்கள் மட்டுமன்றி, அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளா்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத் தகுதியுடையவா்கள்.

இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை மாநில தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.