இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

அனைத்து தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 11:54 pm IST

திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் ப.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மேற்குவங்க மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் வழங்க வேண்டும்.

விடுமுறை அளிக்கத்தவறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறித்து 0421-2240777, 0421-2240701 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.