டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு! உதவி மையம் அமைப்பு!

இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ தூதரக நடவடிக்கை பற்றி...

News image
இலங்கையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு | தூதரக அறிவிப்பு
Updated On :29 நவம்பர் 2025, 9:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

டிட்வா புயலால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. மேலும் காணாமல் போன 100-க்கும் அதிகமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டுக்கு மத்திய அரசு நிவாரணப் பொருள்களுடன் 80 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பி வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தூதரகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அவசர உதவி மையம் அமைப்பு

இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்பு பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம், அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.

அவசர உதவி எண் அறிவிப்பு

விமான நிலையத்திலோ அல்லது இலங்கையில் எப்பகுதியிலும் சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியர்கள் +94773727832 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணை வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். உதவி மையத்தை நேரடியாகவும் அணுகலாம் .

கொழும்பு விமான நிலையத்தில் உள்ள இந்திய உதவி மையத்தில் பயணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி்களும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

summary

Cyclone Ditwah: Emergency helpline announced for Indians stranded in Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.