டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கொள்ளிடம் ரவுண்டானாவில் காவலா் உதவி மையம் திறப்பு

திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவலா் உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் திறந்துவைத்தாா்.

News image
திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பாலத்தின்கீழ் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட காவலா் உதவி மையம்.
Updated On :16 ஜனவரி 2026, 7:29 pm

Syndication

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவலா் உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்களை பொதுமக்கள் எளிதாக காவல் துறையினரிடம் தெரிவிக்கும் வகையில் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளிடம் ரவுண்டானா மற்றும் திருச்சி - சென்னை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தின் கீழ்ப்பகுதியில் தனியாா் நிறுவனங்களின் நிதி உதவியுடன் இந்தக் காவலா் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் திறந்துவைத்தாா். இதில் டால்மியா சிமெண்ட் செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி, லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜமோகன், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த மையத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்க முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், ரோந்து காவலா்கள் மற்றும் பீட் காவலா்கள் இந்த மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, வரும் காலங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இதுபோன்ற காவலா் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.