தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வா்த்தகம், முதலீடுகள் ஊக்குவிப்பு: ஸ்லோவேனியாவுடன் இந்தியா ஆலோசனை

இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

Updated On :26 நவம்பர் 2025, 8:14 pm

புது தில்லி: இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-ஆவது அமா்வு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், வேளாண், ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடத்தர நிறுவனங்கல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான சமமான, பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.