சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வா்த்தகம், முதலீடுகள் ஊக்குவிப்பு: ஸ்லோவேனியாவுடன் இந்தியா ஆலோசனை

இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:14 pm

Chennai

புது தில்லி: இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-ஆவது அமா்வு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், வேளாண், ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடத்தர நிறுவனங்கல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான சமமான, பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.