2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

News image
கோப்புப்படம்.
Updated On :29 ஜூன் 2025, 10:27 am

DIN

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

பன்னிரண்டு தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கினர். அலறல் சத்தம் கேட்டதும், மற்ற தொழிலாளர்கள் மற்றும் திட்ட ஊழியர்கள் மீட்பு முயற்சிகளைத் தொடங்கினர். ஆனால் மண்ணின் ஆழம் மற்றும் கனத்தன்மை உடனடி மீட்பு முயற்சிகளை கடினமாக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்தன. மீட்புக் குழுக்கள் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை அகற்றி சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ஆறு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் நான்கு பேர் பலியாகினர். மேலும் இருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து பேர் இன்னும் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணி நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டனர். ஜங்கி கா நக்லா கிராமத்திற்கு அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

According to officials, some labourers were filling a 10-foot-deep trench dug to lay a pipeline, when the soil caved in. A total of twelve workers got trapped under the soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.