/

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

சட்டவிரோத குடியேற்றம்

Updated On :28 ஜூன் 2025, 9:57 am

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஏழு பேரின் மொபைல் போனில் தடைசெய்யப்பட்ட குறுந்தகடு செயலியைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அதைப் பயன்படுத்தி அவர்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். விசாரணையின்போது ஆரம்பத்தில் தப்பித்த ஒருவர், பின்னர் தான் வங்கதேச நாட்டவர் என்று ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

போலீஸாரின் முதல் நடவடிக்கையில் மொத்தம் 13 வங்கதேச நாட்டவர்களில், 3 குழந்தைகள், 10 பெரியவர்கள் ஆவார். இவர்கள் அனுமதி இல்லாமல் வசித்து வருவது கண்டறியப்பட்டது,

இரண்டாவது நடவடிக்கையில், திருநங்கைகள்போல் மாறுவேடமிட்ட ஐந்து நபர்கள், தலையில் விக், முகம் தெரியாமல் இருக்க மேக்அப், தோற்றத்தையும், குரலையும் மாற்ற அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சையும் மேற்கொண்டது தெரிய வந்தது.

18 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் டாக்கா, குல்னா, காசிபூர் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்க தேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

SUMMARY

Eighteen Bangladeshi nationals staying illegally in Delhi have been apprehended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.